கேள்வி இருந்தும்
விடை தேவைப்படாத-நம்
உண்மை உள்ளம்!
கையுடன் கைகோர்த்தும்
கை மீறத் தோன்றாத
நட்பின் புனிதம்!
பொய்மை தொலைவிருந்து
வேடிக்கைப் பார்த்த
கறைப் படா மனங்கள்!
கல்வியெனும் தூண் பிடித்து
பள்ளிப் பருவத்தை ஏறிப்பார்த்த
துணிந்த நாட்கள்!
ஆயிரம் சகோதரங்கள்
ஒன்றாய்க் கூடியிருந்த
அழகிய குடும்பம்!
பேனைகளும் புத்தகங்களும்
பொக்கிஷமாய் சோர்த்திட்ட
பொற்க் காலம்!
சான்றிதழ்கள் வாங்கி
சமூகத்தில் நிலைகொள்ள
அத்திவாரமிட்ட அறிவு!
போட்டிகளை சவால்களாய்
வென்றெடுத்த தைரியம்!
அழகிய நிறங்களால்
வர்ணம் தீட்டிய மனவானில்
பறந்து திரிந்த அந்த
நாட்கள்!
கவலைகள் துளியளவும்
கைவைக்காத
பிள்ளையுள்ளம்!
இழந்துவிட்டேன் - அந்த
இனிய நாட்களை.....
வளர்ந்துவிட்டேன் - ஆனால்
சுயநலம் உள்ளிருக்கு.....
சுவடுகளான நினைவுகள் மட்டும்
நிலைத்திருக்கு என்னுடன்...
தேடினாலும் கிடைக்குமா....
கனவுகளோடு தொடர்கின்றேன்
கனவான அந்நாட்களை!!!!!
துஷ்யந்தி
விடை தேவைப்படாத-நம்
உண்மை உள்ளம்!
கையுடன் கைகோர்த்தும்
கை மீறத் தோன்றாத
நட்பின் புனிதம்!
பொய்மை தொலைவிருந்து
வேடிக்கைப் பார்த்த
கறைப் படா மனங்கள்!
கல்வியெனும் தூண் பிடித்து
பள்ளிப் பருவத்தை ஏறிப்பார்த்த
துணிந்த நாட்கள்!
ஆயிரம் சகோதரங்கள்
ஒன்றாய்க் கூடியிருந்த
அழகிய குடும்பம்!
பேனைகளும் புத்தகங்களும்
பொக்கிஷமாய் சோர்த்திட்ட
பொற்க் காலம்!
சான்றிதழ்கள் வாங்கி
சமூகத்தில் நிலைகொள்ள
அத்திவாரமிட்ட அறிவு!
போட்டிகளை சவால்களாய்
வென்றெடுத்த தைரியம்!
அழகிய நிறங்களால்
வர்ணம் தீட்டிய மனவானில்
பறந்து திரிந்த அந்த
நாட்கள்!
கவலைகள் துளியளவும்
கைவைக்காத
பிள்ளையுள்ளம்!
இழந்துவிட்டேன் - அந்த
இனிய நாட்களை.....
வளர்ந்துவிட்டேன் - ஆனால்
சுயநலம் உள்ளிருக்கு.....
சுவடுகளான நினைவுகள் மட்டும்
நிலைத்திருக்கு என்னுடன்...
தேடினாலும் கிடைக்குமா....
கனவுகளோடு தொடர்கின்றேன்
கனவான அந்நாட்களை!!!!!
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மைதான் பள்ளிப்பருவம் என்பது குறித்த காலத்தில் மட்டுமே... அந்த பசுமையான நாட்களை தேடினாலும் கிடைக்க வாய்பிபில்லை... நினைவுகளால் மட்டுமே மீட்டுப்பார்க்க முடியும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்கும்... அது ஒரு அழகிய நிலாக் காலம்...!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅழகிய நிறங்களால்
பதிலளிநீக்குவர்ணம் தீட்டிய மனவானில்
பறந்து திரிந்த அந்த
நாட்கள்!
எனக்குப் பிடித்த வரிகள்.
வாழ்த்துகள்.