கவிஞன்..!
*************
விழியென்னும் தடாகமதில்
மொழியெல்லாம் உயிர் பெற்று
சிந்தனைச் செடிகளாய்
கவியிதழ் பூக்களாய்
தமிழ்க் கோர்த்த மாலையாய்
பிறந்திடும் அவன் பார்வையிலே!
தூய்மையின் நிறம் சொல்லும்
வெண் கடுதாசி ஏடுகளும்
அவன் பேனையின் மை பட
பேரழகு பெற்றிடும் -இன்னும்
சில துளி கவிக்காய்
ஏங்கியே நின்றிடும் - அவன்
பாக்களின் சொல்லாலே!
மாயத்திரையை நுகர்ந்து
மனதிலே அழகிய கோலமிட்டு
யதார்த்த வரிகளாய் அமைத்து
ரசிக்கும்படியாய் அமைத்து
சொற்களோடு விளையாடும்
அவன் அழகிய எண்ணங்களே!
எளிமையாய் வாழ்ந்திடும்
அமைதியை நேசித்திடும்
உறவுகளை மதித்திடும்
உணர்வுகளை ரசித்திடும்
உள்ளங்களை படித்திடும் -அவன்
இயல்பான வாழ்க்கையே!
வீசும் தென்றல் கூட அவனிடம்
பேசிடும் மொழிகள்....
இருளின் சுவடுகள் அவனிடம்
காட்டிடும் கவிதைகள்.....
அந்தி வானமோ அவனிடம்
தூவிடும் சிந்தனைகள்...
கொட்டும் மழையோ அவனை
நனைத்திடும் தேன் தமிழாலே...
ஏனெனில் ,
அவனோ இயற்கை அன்னை
தன் கைகளாலே செதுக்கிவிட்ட
குழந்தையே....!!!
துஷ்யந்தி.
*************
விழியென்னும் தடாகமதில்
மொழியெல்லாம் உயிர் பெற்று
சிந்தனைச் செடிகளாய்
கவியிதழ் பூக்களாய்
தமிழ்க் கோர்த்த மாலையாய்
பிறந்திடும் அவன் பார்வையிலே!
தூய்மையின் நிறம் சொல்லும்
வெண் கடுதாசி ஏடுகளும்
அவன் பேனையின் மை பட
பேரழகு பெற்றிடும் -இன்னும்
சில துளி கவிக்காய்
ஏங்கியே நின்றிடும் - அவன்
பாக்களின் சொல்லாலே!
மாயத்திரையை நுகர்ந்து
மனதிலே அழகிய கோலமிட்டு
யதார்த்த வரிகளாய் அமைத்து
ரசிக்கும்படியாய் அமைத்து
சொற்களோடு விளையாடும்
அவன் அழகிய எண்ணங்களே!
எளிமையாய் வாழ்ந்திடும்
அமைதியை நேசித்திடும்
உறவுகளை மதித்திடும்
உணர்வுகளை ரசித்திடும்
உள்ளங்களை படித்திடும் -அவன்
இயல்பான வாழ்க்கையே!
வீசும் தென்றல் கூட அவனிடம்
பேசிடும் மொழிகள்....
இருளின் சுவடுகள் அவனிடம்
காட்டிடும் கவிதைகள்.....
அந்தி வானமோ அவனிடம்
தூவிடும் சிந்தனைகள்...
கொட்டும் மழையோ அவனை
நனைத்திடும் தேன் தமிழாலே...
ஏனெனில் ,
அவனோ இயற்கை அன்னை
தன் கைகளாலே செதுக்கிவிட்ட
குழந்தையே....!!!
துஷ்யந்தி.
வணக்கம்
பதிலளிநீக்குவீசிடும் தென்றல் கூட கவிஞனின் மொழிதான்...
அந்திவானம் தூவிடும் சிந்தனை . ....
அடா அடா.... என்ன கற்பனை ... கவிஞன் கற்பனையில் குழந்தையாவான்...
அருமையான வரிகள் தொடர் பதிவிட வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குநன்றி நண்பன் தனபாலன்
பதிலளிநீக்குசிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
வணக்கம்
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.