.

.

திங்கள், 18 மே, 2015

முள்ளிவாய்க்கால்
**********************

முற்பகலும் பிற்பகலும்
முன்னிரவும் பின்னிரவும்
எல்லாமுமே ஒன்றாக
இருட்டறையில் நாம் காண
விடிவெள்ளியாய் வெடிகுண்டுகள்
வெளிச்சங்காட்டி குருதிதனை
மண்ணிலே ஈரமாக்கி
மனித உயிர்களை எல்லாம்
பிணமாக உருமாற்றி
மனித மிருகங்களுக்கு புசிக்க
வழி செய்த இடம்...!

கண்ணிருந்தும் குருடராய்
வாயிருந்தும் ஊமைகளாய்
உணர்விருந்தும் ஜடங்களாய்
உரிமை இருந்தும் வெறுமையாய்
பலமிருந்தும் கோழையாய்
எம் சிந்தனைப் பதிவுகள் யாவும்
சினங்கொண்ட கயவர்களால்
சித்திரவதை செய்யப்பட்டு
மண்ணோடு மண்ணாய்
புதைக்கப்பட்ட இடம்..!

கொட்டும் மழையிலும்
குத்தும் வெயிலிலும்
ஒதுங்க இடமின்றி
அன்னத்தை மறந்து
அருசுவையை மறந்து
மண்ணிலே சிலநேரம்
கண்மூடிக் கிடக்கயில்
மனிதரென்றும் பாராமல்
உயிரோடு புதைகுழியில்
மனிதரெல்லாம் மடிக்கப்பட்ட
கொடுமை நிலைதனை
எங்கே சென்று சொல்வது...???

ஒளியில்லா இருட்டறையில்
வெடிகுண்டுகள் மேல் பாய
உடல்கள் சிதறிக் கிடக்க
பச்சிளங் குழந்தையொன்று
உயிரற்றத் தன் தாயின்
மார்பிலே பாலருந்தும்
கொடூரக் காட்சிக்கு
விடை எங்கே தேடுவது...!

தமிழனின் கேள்விகளுக்கு
விடையொன்று தந்ததாய்
பெரும்பான்மை உலகிற்கு
நாடகமொன்று நடாத்த
அமைக்கப்பட்ட மேடையே
"முள்ளிவாய்க்கால்"........இருந்தும்
இது முடிவல்ல ..........
நம் தொடக்கமே............!!!

துஷ்யந்தி


2 கருத்துகள்:

  1. என்றும்
    நினைவில் உருளும் - அந்த
    "முள்ளிவாய்க்கால்"

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    வரலாற்றில் அழிக்க முடியாத சுவடு... எழுதிய வரிகளை படித்த போது மனம் கனத்து விட்டது. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வணக்கம்
உறவுகளே...வருக வருக அன்புடன்