.

.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

விவசாயி......



பயிருக்கு முதலாளி
அவன் கை பட்டால் மண்ணும்
தினமாகும் கண்ணாடி...
அவன் வியர்வைத் துளிகளின்
விடைகளே வேளாண்மை!


ஆதவனின் ஒளிகொண்டு
ஓடிடும் அவன் வாழ்வு...
பருவகால மாற்றங்கள்
காட்டிடும் நல்ல நேரங்கள்
வீசிடும் காற்று அவனுக்கு
கூறிடும் திசைகள்....!


மருதநிலத்து சொந்தக்காரன்
உழவனெனும் விவசாயி
உழவாரமிட்டு களை செதுக்கி
பண்படுத்திய வயலிலே
உழுதிடுவான் உழவன்...!


உழலைமரம் கட்டிய மாடுகள்
உழலும் போது மண்ணும்
வளியூட்டப்பட்டு புறட்டப்பட்டு
மாறிடும் செழிப்பாக....!


வளமாக்கிய பாத்திகளில்
பதமாய் நீரிட்டு வரம்புகட்டி,
பதரில்லா விதைதனை
பார்த்துப் பார்த்து நட்டுவைத்து
கத்தரி வெருளி ஒன்றை
காவலிட்டு இராப்பகலும்
காத்திடுவான் விவசாயி!


பசளையிட்டு களைபிடுங்கி
கிருமிநாசினி மருந்து தெளித்து
பீடைகள் தாக்கிடாவண்ணம்
பீடைக்கட்டுப்பாடும் செய்து
பயிர்கள் பதமாய்
பருவமடையும் வரை காத்து
வேளாண்மை ஒன்றையே
எதிர்பார்ப்பவன் விவசாயி!


ஊரெல்லாம் கடன்பட்டு
பயிருக்காய் முதலீடிட்டு
உதிரமெல்லாம் வியர்வையாக்கி
காத்திருக்கும் பயிர்ச்செய்கை
வீணாகும் நேரத்தில்
வேதனை தாங்காமல்
மரணம்வரை செல்வதயும் இங்கு
நாம் நினைவூட்டல் 
வேண்டும்!

அன்று தொட்டு இன்றுவரை
அவன் நிலைமை மாறவில்லை
அரசன் காலத்திலும் அப்படியே
நவீன யுகத்திலும் அப்படியே
மாறியதென்னவோ - அவன்
கையாலும் முறையொன்றே!


-நன்றி-
-அன்புடன்-
-துஷ்யந்தி-

6 கருத்துகள்:

  1. வணக்கம்

    ஒவ்வொரு வரிகளையும் இரசித்து படித்தேன் உண்மையில் போற்ற வேண்டிய தெய்வங்கள்
    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வணக்கம்
உறவுகளே...வருக வருக அன்புடன்