.

.

சனி, 25 ஏப்ரல், 2015

இன்றும் புத்துணர்வூட்டுவதாய்!


உயிரொன்று உருவாகி
வாழ்வொன்றை தொடர்கையிலே
கடந்துவந்த பாதைகளின்
அழியாத பல நினைவுகளை,,,

மழலையிலே கைகோர்த்த
மகிழ்ச்சியான நிமிடங்களை
மறந்தாலும் மறந்திடாத
பள்ளிப்பருவ துளிகளை,,,

மனதிலே மாற்றமுடியா
அழியாத சித்திரங்களை
இழந்துவிட்ட இழமையின்
இழக்காத வாசம்தனை,,,

கண்ணீரின் வலிகளால் ஆன
உறவுகளின் எண்ணங்களை
வார்த்தைகளால் சுட்டுப்போன
சடங்குகளின் நிமிடங்களை,,,

பரிசுகள் பெற்றுச்சேர்த்த
அழகிய அந்த நொடிகளை
பட்டம் பெறுகையில் பாராட்டிய
பெற்றோரின் மகிழ்ச்சியை,,,

வயதொன்று போகையிலே
தடயமிட்ட பிறந்தநாளை
வாழ்த்தி வாழ்த்தி மகிழ்ந்த
நட்புக்களின் புன்னகையை,,,

பாய்ந்தோடும் நதிகளின்
எழில் கொஞ்சும் அழகினை
கரைதொட்டு முத்தமிடும்
கடலன்னையின் நுரைதனை,,,

திருநாட்கள் கொண்டாடி
திருப்தி கண்ட நாட்களை
திரும்பத் திரும்ப பார்க்கவைத்த
பண்டிகை உணவுகளை,,,

திசைதெரியா தூரதேசம்
போய்ப் பார்த்த அழகினை
திகைத்து நின்று ஒரு நொடி
பார்க்க வைத்த அதிசயத்தை,,,

முகநூலிலே முகம் தெரியா
பல அன்பு உள்ளங்களை
பலகிவிட்டுப் பிரிந்துபோன
உருகவைத்த  உயிர் நட்புக்களை,,

கவிதையொன்று கவிதைவயலிலே
புனையவேண்டுமென்ற நினைவினை
கைக்கருகே கொண்டுவரும்
கணனிகளின் ஒளிதனை,,,

எண்ணற்ற கவிகளின்
எட்டிப்பிடிக்கா சிந்தனையை
எட்டிப்பிடிக்க நினைக்கையிலே
வழுக்கி விழும் நொடிகளை,,,

மறைந்தும் உயிர்வாழும்
பிரிந்தும் சோர்ந்திருக்கும்
நினைவின் விம்பமாக வாழும்
இன்றும் புத்துணர்வூட்டும்
அழியாப் புகைப்படமே..!!!!

துஷ்யந்தி









6 கருத்துகள்:

  1. மறைந்தும் உயிர்வாழும்
    பிரிந்தும் சோர்ந்திருக்கும்
    நினைவின் விம்பமாக வாழும்
    இன்றும் புத்துணர்வூட்டும்
    அழியாப் புகைப்படமே..!!!!

    அருமையான வரிகளில் அழகு கவிதை
    வாழ்த்துக்கள் துஷ்யந்தி.......


    பதிலளிநீக்கு
  2. மறைந்தும் உயிர்வாழும்
    பிரிந்தும் சோர்ந்திருக்கும்
    நினைவின் விம்பமாக வாழும்
    இன்றும் புத்துணர்வூட்டும்
    அழியாப் புகைப்படமே..!!!!

    அருமையான வரிகளில் அழகு கவிதை
    வாழ்த்துக்கள் துஷ்யந்தி.......


    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஒவ்வொரு வரிகளையும் மனத் திறந்து இரசித்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வணக்கம்
உறவுகளே...வருக வருக அன்புடன்